×

கும்பகோணத்தில் ரூ.30 லட்சம் கேட்டு கல்லூரி மாணவி கடத்தல்

கும்பகோணம்: கும்பகோணத்தில் கல்லூரி மாணவியை ரூ.30 லட்சம் கேட்டு கடத்தியதாக வந்த புகாரை அடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் லதா ((18, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரியில் பிஎஸ்சி முதலாமாண்டு படித்து வருகிறார். நேற்றுமுன்தினம் கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்ற லதா இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய் சித்ரா, மகள் செல்போனுக்கு பலமுறை தொடர்பு கொண்டும் லதா போனை எடுக்கவில்லை.

இந்நிலையில் இரவு 11 மணி அளவில் சித்ராவின் செல்போனுக்கு வேறு ஒரு எண்ணிலிருந்து, உங்களது மகளை கடத்தியுள்ளோம். ரூ.30 லட்சம் கொடுத்தால் விட்டுவிடுவோம், இல்லையெனில் உடலை வீட்டுக்கு அனுப்பி வைப்போம் என குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சித்ரா உடனடியாக பந்தநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் திருவிடைமருதூர் டிஎஸ்பி ராமச்சந்திரன் மற்றும் பந்தநல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : college student ,Kumbakonam , college student,kidnapped,Kumbakonam
× RELATED கும்பகோணத்தில் இறந்த நிலையில்...