×

சென்னையில் கைதியை தப்பவிட்ட போலீசார் 3 பேர் சஸ்பெண்ட்

மதுரை: மதுரை கைதியை சென்னையில் தப்பவிட்ட 3 போலீசாரை துணை கமிஷனர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே முகவூர் முத்துசாமிபுரத்தைச் சேர்ந்தவர் தொந்தி கணேசன் (26). கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவரை சென்னை கொருக்குப்பேட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கு தொடர்பாக சென்னை ஐகோர்ட் வளாகத்தில் உள்ள மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்த ஆயுதப்படை போலீசார் கணேசன், மகாலிங்கம், குமரேசன் ஆகியோர் அழைத்து சென்றனர்.

அவரை 13ம் தேதி ஆஜர்படுத்தி விட்டு, மீண்டும் மதுரைக்கு வர மின்சார ரயிலில் பெருங்களத்தூர் வந்தனர். அங்குள்ள பஸ் ஸ்டாண்டுக்கு நடந்து வந்தபோது, போலீசாரை தள்ளி விட்டு தொந்தி கணேசன் தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து பெருங்களத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து கைதியை தேடி வருகின்றனர். இதற்கிடையே கைதியை அழைத்துச் சென்று கவனக்குறைவாக இருந்து தப்ப விட்ட போலீசார் மகாலிங்கம், குமரேசன், கணேசன் ஆகியோரை மதுரை ஆயுதப்படை துணை கமிஷனர் சஸ்பெண்ட் செய்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chennai , people,prisoner,cops,suspended,Chennai
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...