×

குமரி கலெக்டர் ஆபீசில் பரபரப்பு ரூ.4 லட்சம் லஞ்ச பணத்துடன் சிக்கிய பேரூராட்சி இன்ஜினியர்

நாகர்கோவில்: குமரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் பல மணி நேரம் காத்திருந்து, பேரூராட்சி உதவி செயற்பொறியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கி பிடித்தனர். குமரி மாவட்டம் வேர்கிளம்பி பேரூராட்சியில் அரசு பணிக்கான ஒப்பந்ததாரர்களிடம் பேரம் பேசப்படுவதாக புகார் எழுந்தது. இந்த புகார்களின் அடிப்படையில் கடந்த இரு தினங்களுக்கு முன் குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. மதியழகன் தலைமையில் வேர்கிளம்பி பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி கணக்கில் வராத பணம் ₹1 லட்சம் கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரகசிய கண்காணிப்பில் இருந்தனர்.

இரவு 8 மணியளவில் பேரூராட்சி உதவி இயக்குனர் அலுவலகத்துக்கு பேரூராட்சிகளின் உதவி செயற்ெபாறியாளர் மாடசாமி சுந்தர்ராஜ் தனது காரில் வந்தார். அலுவலகத்துக்குள் செல்ல முயன்ற அவரை மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அவரிடம் இருந்து ₹4 லட்சத்து 9 ஆயிரம் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரிடம் 4 மணி நேரம்  விசாரணை நடத்திவிட்டு தேவைப்படும்போது விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுப்பி வைத்தனர். இந்த விவகாரத்தில், மாடசாமி சுந்தர்ராஜ் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க அனுமதிக்குமாறு பேரூராட்சி இயக்குனரக அதிகாரிக்கும், லஞ்ச ஒழிப்பு போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : collector ,Kumari ,office , Kumari,Collector,office,bribe
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...