×

தஞ்சை அருகே பரிதாபம் பஸ்சுக்கு காத்திருந்தவர்கள் மீது கார் மோதியதில் 2 பேர் பலி

தஞ்சை: திருச்சி கள்ளர் தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி கவுரி(56). புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் கருப்பையா(55). புதுக்கோட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மாரிமுத்து(65). இவர்கள் மூவரும் தஞ்சை அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த தங்களது உறவினர் வீட்டின் திருமணத்துக்கு நேற்று முன்தினம் வந்தனர். திருமணம் முடிந்த பின்னர் ஊருக்கு செல்ல பஸ் ஏறுவதற்காக புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் பஸ் ஸ்டாப்பில் நின்றனர்.

அப்போது தஞ்சையில் இருந்து உடையார்கோயில் நோக்கி சென்ற கார் இவர்கள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த 3 பேரும் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கவுரி, கருப்பையா ஆகியோர் நேற்று அதிகாலை இறந்தனர். மாரிமுத்து தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தஞ்சை தாலுகா ேபாலீசார் கார் டிரைவர் ரமணி(48) என்பவரை கைது செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tanjore , Two people,killed,car,crashed,Tanjore
× RELATED தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் 2வது நாளாக வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை