பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 25 தீயணைப்பு வீரர்களுக்கு தலா ரூ.3 லட்சம் முதல்வர் உத்தரவு

சென்னை: பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 25 தீயணைப்பு வீரர்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கை:கோயம்புத்தூர் கணபதி தீயணைப்பு நிலையத்தில், தீயணைப்பாளராகப் பணியாற்றி வந்த என்.செல்வராஜ், கடலூர் நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலையத்தில், தீயணைப்பாளராகப் பணிபுரிந்து வந்த வைத்தியநாதன், திருவண்ணாமலை தீயணைப்பு நிலையத்தில், டிரைவராக பணிபுரிந்து வந்த சந்திரன், திருவண்ணாமலை செங்கம் தீயணைப்பு நிலையத்தில், தீயணைப்பாளராகப் பணிபுரிந்து வந்த சுந்தரம், விழுப்புரம்  கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையத்தில், முன்னணி தீயணைப்பாளராகப் பணிபுரிந்து வந்த கருணாகரன், ராமநாதபுரம் ஏர்வாடி தீயணைப்பு நிலையத்தில், முன்னணி தீயணைப்பாளராகப் பணிபுரிந்து வந்த முத்து, திண்டுக்கல் தாலுகா தீ தடுப்புக்குழுவில் நிலைய அலுவலராகப் பணிபுரிந்து வந்த சீனிவாசகம், வடசென்னை, வ.உ.சி. நகர் தீயணைப்பு நிலையத்தில், முன்னணி தீயணைப்பாளராகப் பணிபுரிந்து வந்த கோபால், திருப்பூர் மாவட்டம், உடுமலை தீயணைப்பு நிலையத்தில், இயந்திர கம்மியர் ஓட்டியாக பணிபுரிந்து வந்த ஜவஹர் ஆகியோர் உடல் நலக்குறைவால் காலமானார்கள் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.

தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் பணிபுரிந்து உயிரிழந்த நிலைய அலுவலர், தீயணைப்பாளர் ஆகியோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 25 தீயணைப்பாளர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: