×

விளையாட்டு விபரீதமானது தண்டவாளத்தில் பாறாங்கல் வைத்த சிறுவன் சிக்கினான்

சென்னை; தண்டவாளத்தில் பாறாங்கல் வைத்த சிறுவனை ரயில்வே போலீசார் பிடித்து சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர். தாம்பரம் அடுத்த இரும்புலியூர் மேம்பாலம் அருகே, நேற்று முன்தினம் இரவு தண்டவாளத்தில் யாரோ சமூக விரோதிகள் பாறாங்கல் வைத்துள்ளனர். அந்த பாறாங்கல்லின் மீது விழுப்புரத்தில் இருந்து வேலூர் நோக்கி சென்ற ரயில் அதிவேகமாக மோதியது. இதில் ரயில் இன்ஜினும் சிறிதளவு சேதமடைந்தது. தாம்பரம் ரயில்வே போலீசார் விசாரணையில் இரும்புலியூர் பகுதியை சேர்ந்த 13 வயது பள்ளி மாணவன் பள்ளி முடிந்து தினமும் அந்த வழியாக வரும்போது விளையாட்டுத் தனமாக தண்டவாளத்தில் கல்லை வைத்தார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து ரயில்வே போலீசார் அந்த சிறுவனை செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : track , game,complicated,trapped,boy,track
× RELATED ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒருவழிப்பாதையாக மாற்றம்..!!