முசாபர்பூர்: தங்கும் விடுதிகளில் நடைபெற்ற பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு தொடர்பாக பீகார் முதல்வர் நிதிஷ் குமாரிடம் விசாரணை நடத்தும்படி சிபிஐ.க்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பீகார் மாநிலம், முசாபர்பூர் நகரில் தொண்டு நிறுவன நடத்தி வந்த தங்கும் விடுதிகளில் இருந்த சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டனர். இது தொடர்பான விசாரணை சிபிஐ நீதிமன்றத்தில் இருந்து போக்சோ நீதிமன்றத்துக்கு சமீபத்தில் மாற்றப்பட்டது. இந்நிலையில், சிறுமிகளை பலாத்காரம் செய்வதற்கு முன்பாக மயக்க ஊசி செலுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட அஸ்வனி என்பவர் போக்சோ நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், `இந்த வழக்கில் விசாரணை என்ற பெயரில் உண்மைகளை மறைக்க சிபிஐ முயல்கிறது.