கிறைஸ்ட்சர்ச்: வங்கதேச அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற நியூசிலாந்து 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. ஹேக்லி ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீசியது. வங்கதேசம் 49.4 ஓவரில் 226 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. முகமது மிதுன் அதிகபட்சமாக 57 ரன் விளாசினார். சப்பிர் ரகுமான் 43, முஷ்பிகுர் ரகிம் 24, சவும்யா சர்க்கார் 22, மிராஸ் 16 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். நியூசி. பந்துவீச்சில் பெர்குசன் 3, டாட் ஆஸ்டில், நீஷம் தலா 2, ஹென்றி, போல்ட், கிராண்ட்ஹோம் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.