கோவை : தமிழகத்தில் அரசு பள்ளிகளில் சத்துணவில் முட்டை சாப்பிடாத பள்ளி மாணவ மாணவிகளுக்கு வாழைப்பழம் வழங்கும் திட்டம் முடங்கியுள்ளது. தமிழகத்தில் அரசு ஆரம்ப பள்ளி, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் 51.96 லட்சம் மாணவ-மாணவிகள் சத்துணவு திட்டத்தில் பயன்பெறுகின்றனர். பள்ளி நாட்களில் மதிய சத்துணவில் ஒவ்வொரு மாணவ-மாணவிக்கும் தலா ஒரு முட்டை வழங்கப்படுகிறது. ஒரு ஆண்டிற்கு 210 நாள் சத்துணவில் முட்டை வழங்கப்படுகிறது. முட்டை சாப்பிடாத மாணவ-மாணவிகளுக்கு வாழைப்பழம் வழங்கும் திட்டம் கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை 14ம் தேதி முதல் பயன்பாட்டில் இருக்கிறது. இத்திட்டத்திற்கு சமூக நலத்துறை மூலமாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஒரு வாழைப்பழத்திற்கு 1.25 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த விலைக்கு அழுகிப்போன வாழைப்பழம்கூட கிடைக்காது, இந்த விலையில் இத்திட்டத்தை ெதாடர முடியாது என இத்துறையினர் மறுப்பு தெரிவித்தனர்.