சென்னை: சென்னை தாம்பரம் அருகே தனியார் ஆம்னி பேருந்து ஒன்று திடீரென்று தீப்பிடித்து எரிந்து சாம்பலானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை அடையாறில் இருந்து தேனிக்கு 7.30 மணிக்கு 32 பயணிகளுடன் புறப்பட்ட தனியார் ஆம்னி பேருந்து தாம்பரம் - இரும்புலியூர் மேம்பாலம் சென்றது. அப்போது பேருந்தின் முன்பகுதி திடீரென்று தீப்பற்றி எரிந்தது. உடனே பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு அவசர அவசரமாக பேருந்தில் இருந்து குதித்து உயிர் தப்பினர்.