சிறை கைதி திடீர் சாவு

புழல்: கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் இப்ராகிம் (54). இவர், கடந்த 2013ம் ஆண்டு போதை பொருள் வைத்திருந்ததாக சென்னை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் 10 ஆண்டு தண்டனை கைதியாக இருந்து வந்தார்.காசநோயால் பாதிக்கப்பட்ட இப்ராகிம்மை கடந்த ஜனவரி மாதம் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று காலை இறந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: