ராட்சத அலையில் சிக்கி பள்ளி மாணவன் பலி

சென்னை : தாம்பரம் அடுத்த காட்டாங்கொளத்தூரை சேர்ந்த ரோஹித்(17), சைதாப்ேபட்டை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தான். இச்சிறுவன், நேற்று முன்தினம் சக மாணவர்களுடன் மெரினா கடற்கரைக்கு சென்று கடலில் குளித்துள்ளார். அப்போது, ராட்சத அலையில் சிக்கி ரோஹித் மாயமானார். இதுகுறித்து சக மாணவர்கள் அண்ணாசதுக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவனை தேடி வந்தனர்.  இந்நிலையில், ேநற்று மாலை நேதாஜி சிலை அருகே ரோஹித் உடல் கரை ஒதுங்கியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: