நாக்பூர்: இந்திர இந்திய அணியுடனான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில், ரஞ்சி சாம்பியன் விதர்பா அணிக்கு 280 ரன் இலக்கு நிர்ணயிகப்பட்டுள்ளது. நாக்பூர், விதர்பா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று முதலில் பேட் செய்த இதர இந்திய அணி (ரெஸ்ட் ஆப் இந்தியா) 330 ரன் குவித்து ஆல் அவுட்டானது. அடுத்து களமிறங்கிய விதர்பா முதல் இன்னிங்சில் 425 ரன் குவித்து ஆட்டமிழந்தது. சஞ்சய் 65, கணேஷ் சதீஷ் 48, அக்ஷய் வாத்கர் 73, அக்ஷய் கர்னிவார் 102 ரன் விளாசினர். இதர இந்தியா பந்துவீச்சில் சாஹர் 4, ராஜ்பூட், கவுதம், தர்மேந்திரசிங் ஜடேஜா தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 95 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இதர இந்தியா 3ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 102 ரன் எடுத்திருந்தது. நேற்று நடந்த 4வது நாள் ஆட்டத்தில் அந்த அணி 3 விக்கெட் இழப்புக்கு 374 ரன் என்ற ஸ்கோருடன் டிக்ளேர் செய்தது. கேப்டன் அஜிங்க்யா ரகானே 87 ரன் (232 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தார். ஹனுமா விஹாரி - ரகானே ஜோடி 3வது விக்கெட்டுக்கு 229 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.