மார்ச் 10ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் : தமிழக அரசு அறிவிப்பு

சென்னை : போலியோ சொட்டு மருந்து முகாம் மார்ச் 10ம் தேதி நடைபெற உள்ளதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. போலியோ சொட்டு முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். 5 வயதிற்குட்பட்ட எல்லா குழந்தைகளுக்கும் மார்ச் 10ம் தேதி (ஞாற்றுக்கிழமை) போலியோ சொட்டு மருந்து  கொடுக்க வேண்டும். சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்படுகிறது. முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சோதனைச் சாவடிகள், சுங்கச் சாவடிகள், விமான நிலையங்கள் என 1,652 பயணவழி மையங்களில் முகாம் அமைக்கப்பட்டுள்ளது.  1,000 நடமாடும்  குழுக்கள் மூலம் தொலை தூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது என அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: