கோவை: கேரள மாநிலம் பாலக்காடு அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையில், கோவையில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.56 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், பட்டாம்பி அடுத்த குலுக்கல்லூரில் கொப்பம் எஸ்.ஐ. ராஜேஷ் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோவையில் இருந்து வேகமாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, காரின் சீட்டுப்பகுதிகளில் சிறப்பு அறை அமைத்து அதில் புதிய 500, 2000 நோட்டுகள் அடங்கிய மொத்தம் ரூ.56 லட்சம் கடத்தி செல்வது தெரியவந்தது.