ஈரோடு: ஈரோடு அருகே உள்ள முள்ளாம்பரப்பை சேர்ந்தவர் இளநீர் வியாபாரி பரமசிவம்(35). பவானியில் இருந்து முள்ளாம்பரப்புக்கு கோவை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அவ்வழியாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பாதுகாப்பு பணிக்காக வந்து கொண்டிருந்த போலீஸ் வேன் மோதியதில் பரமசிவம் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து சித்தோடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.