கரூர்: அரசியலில் எல்லாமே கலப்படம்தான்’ என்று தம்பிதுரை கூறினார். கரூரில் நேற்று, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுகவில் யார் வேண்டுமானாலும் சீட் கேட்டு விண்ணப்பிக்கலாம். ஆனால் யாருக்கும் கியாரண்டி கிடையாது. ஒருவேளை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னதம்பிக்கு கரூர் தொகுதியை கட்சி ஒதுக்கினால் அவரது வெற்றிக்காக பாடுபடுவேன். இதில் கருத்து வேறுபாடு இல்லை. தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்க அதிமுகவில் குழு உள்ளது. அந்த குழுவில் நான் இல்லை. எனவே கூட்டணி குறித்து நான் எதுவும் கூற முடியாது.