அரசியலில் எல்லாமே கலப்படம்தான்: தம்பிதுரை பேட்டி

கரூர்: அரசியலில் எல்லாமே கலப்படம்தான்’ என்று தம்பிதுரை கூறினார். கரூரில் நேற்று, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுகவில் யார் வேண்டுமானாலும் சீட் கேட்டு விண்ணப்பிக்கலாம். ஆனால் யாருக்கும் கியாரண்டி கிடையாது. ஒருவேளை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னதம்பிக்கு கரூர் தொகுதியை கட்சி ஒதுக்கினால் அவரது வெற்றிக்காக பாடுபடுவேன். இதில் கருத்து வேறுபாடு இல்லை. தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்க அதிமுகவில் குழு உள்ளது. அந்த குழுவில் நான் இல்லை. எனவே கூட்டணி குறித்து நான் எதுவும் கூற முடியாது.

தமிழகத்தின் நலனுக்காக நாடாளுமன்றத்தில் அதிமுக குரல் கொடுத்தது. அதற்கும் கூட்டணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இவ்வாறு தம்பிதுரை கூறினார். திருப்பூர் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகள் கலப்பட கூட்டணி அமைத்திருப்பதாக பேசியது குறித்து கேட்டபோது, அரசியலில் எல்லாமே கலப்படம்தான் என்று தம்பிதுரை கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: