கூட்டணி கட்சிகளால்அதிமுகவுக்கு பலம் இல்லை: அன்வர்ராஜா எம்.பி. பேட்டி

ராமநாதபுரம்:  கூட்டணி கட்சிகளால் அதிமுகவுக்கு பலமில்லை’ என்று அன்வர்ராஜா எம்.பி. தெரிவித்து இருக்கிறார்.  ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு எம்.பி. தொகுதி நிதியிலிருந்து பேட்டரி காரை அன்வர்ராஜா எம்.பி. நேற்று வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கூட்டணிக்கும், கொள்கைக்கும் சம்பந்தமே இல்லை. கூட்டணியை பொறுத்தவரை தேர்தலுக்கு முன், தேர்தலுக்கு பின் என உள்ளது. தேர்தலில் வாக்குகளை சிதறவிடாமல் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் எண்ணிக்கையை கூட்டுவதற்காகத்தான் கூட்டணி. எந்த கட்சிகளோடு கூட்டணி என்பது பற்றி தலைவர்கள் பேசிக்கொண்டிருக்கின்றனர்.

அதிமுகவுக்கு கூட்டணி கட்சிகளால் பலம் இல்லை. எங்களோடு கூட்டணி சேரும் கட்சிகளுக்குத்தான் பலன். மத்தியில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழ்நாட்டின் உரிமைகளை போராடித்தான் பெற வேண்டியுள்ளது. நாடாளுமன்றத்தை முடக்கி போராடியதால்தான் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தது. இவ்வாறு அன்வர்ராஜா கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: