சென்னை: அதிமுக அரசின் இரண்டாம் ஆண்டு நிறைவு சாதனை மலரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார்.முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பொறுப்பேற்று நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதையொட்டி, செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் தயாரிக்கப்பட்ட ஜெயலலிதா அரசின் - சாதனைகள் ஈராண்டு தொடரும் பல்லாண்டு என்ற இரண்டாண்டு சாதனை மலர், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் ஆற்றிய உரைகளின் தொகுப்புகள், சட்டப்பேரவையில் ஆற்றிய உரைகளின் தொகுப்பு மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆற்றிய உரைகளின் தொகுப்புகள், பொன்மொழிகள், இரண்டாண்டு சாதனைகளின் குறும்படம் மற்றும் காலப் பேழை புத்தகம் ஆகியவற்றை தலைமை செயலகத்தில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார். அப்போது அமைச்சர்கள் உடனிருந்தனர்.