×

பாஜவுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்பேன்: தம்பிதுரை பரபரப்பு பேட்டி

சென்னை: மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சென்னை விமான நிலையத்தில் நேற்று அளித்த பேட்டி: அதிமுக கூட்டணி பற்றி பேசுவதற்கும், தொகுதிகள் பங்கீடு சம்பந்தமாக முடிவு செய்வதற்கும், தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த குழுக்கள் தான் முடிவு செய்யவேண்டும். என்னை பொறுத்தமட்டில் தமிழகத்தின் உரிமைகளை பெறுவதற்காக நான் தொடர்ந்து பாடுபடுவேன். தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகள் கிடைப்பதில், மத்திய அரசு குறுக்கிடும் பட்சத்தில் அதற்கு எதிராக நான் குரல் கொடுப்பேன். அதே போல் அதிமுக கட்சியின் செயல்பாடு, தமிழக அரசின் செயல்பாடுகள் பற்றி எல்லாம் பாஜவினர் குறை சொல்லும் போது அதை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. எனவே அப்படிப்பட்ட நேரத்தில் அதற்கு எதிராக  என்னுடைய கண்டனத்தை, எதிர்ப்பை நான் தொடர்ந்து பதிவு செய்து கொண்டு வருகிறேன். கூட்டணி பற்றி தனிப்பட்ட முறையில் நான் எந்த கருத்தையும் கூறமுடியாது. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானலும் அரசியலுக்கு வரலாம். அரசியலிலும் ஈடுபடலாம். ஆனால் அவர்களை மக்கள் ஏற்றுக்கொண்டால் அரசியலில் நிலைத்து நிற்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : interview ,Bhajan ,brother-in-law , BJp, brother
× RELATED திமுக அளித்த புகாரில் ஒன்றிய...