நாக்பூர்: இந்திர இந்திய அணியுடனான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில், ரஞ்சி சாம்பியன் விதர்பா அணி முதல் இன்னிங்சில் முன்னிலை பெற கடுமையாகப் போராடி வருகிறது.நாக்பூர், விதர்பா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று முதலில் பேட் செய்த இதர இந்திய அணி (ரெஸ்ட் ஆப் இந்தியா) 330 ரன் குவித்து ஆல் அவுட்டானது (89.4 ஓவர்). மயாங்க் அகர்வால் 95 ரன், ஹனுமா விஹாரி 114 ரன் விளாசினர். விதர்பா பந்துவீச்சில் சர்வதே, வாக்கரே தலா 3, குர்பானி 2, யாஷ் தாகூர், கர்னிவார் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இரண்டாம் நாளான நேற்று, விதர்பா அணி முதல் இன்னிங்சை தொடங்கி விளையாடியது. கேப்டன் பைஸ் பஸல் - சஞ்சய் ரகுநாத் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 50 ரன் சேர்த்தது. பஸல் 27 ரன் எடுத்து வெளியேற, அடுத்து வந்த அதர்வா டெய்டே 15 ரன்னில் ஆட்டமிழந்தார். பொறுப்புடன் விளையாடி அரை சதம் அடித்த சஞ்சய், 65 ரன் எடுத்து (166 பந்து, 9 பவுண்டரி) பெவிலியன் திரும்பினார்.