×

கன்னியாகுமரி அருகே மது குடிப்பதற்கு பணம் தராததால் தந்தையை கொன்ற மகன் கைது

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே மது குடிப்பதற்கு பணம் தராத தந்தையை அடித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். பூதப்பாண்டி அருகே காட்டுப்புதூரை சேர்ந்த தனுஷ் தனது தந்தை நடராஜனிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த தனுஷ் உருட்டுக்கட்டையால் தனது தந்தையை சரமாரியாக தாக்கியுள்ளார்.

படுகாயமடைந்த நடராஜன் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார். கொலையை மறைப்பதற்காக அவரது உடலை அவசர அவசரமாக அடக்கம் செய்ய முயன்றுள்ளனர். இதனை அறிந்த போலீசார் நடராஜன் உடலை கைப்பற்றியதோடு தனுஷை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kanyakumari , son,killed,father,money,drink,liquor,arrested,Kanyakumari
× RELATED கன்னியாகுமரி மக்களவை தேர்தல்-...