×

ஐஎஸ் இயக்கத்திடம் ரூ.2 கோடி வாங்கிய 3 பேர் கைது

திருவனந்தபுரம்: கேரளாவின் செம்பரிக்கா பகுதியைச் சேர்ந்தவர் தஸ்லின் என்ற முஹ்தாசிம். பாஜவின் காசர்கோடு மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளராக இருந்து வந்தார். இவருக்கு ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக தெரியவந்ததால் டெல்லி போலீசார் இவரை கைது செய்தனர். விசாரணையில், இவரது தலைமையில் 3 பேர் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்தது தெரியவந்தது. இவர்கள் துப்பாக்கி சுடுவதில் பயிற்சி பெற்றவர்கள். இவர்கள் ஐஎஸ் இயக்கத்திடம் இருந்து ₹2 கோடி பெற்றுள்ளனர். இதை வைத்து நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில், கலவரத்தை தூண்டவும் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : persons , IS mobility, Rs 2 crore, 3 arrested
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...