நகை : ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பயிலும் ஆசிரிய மாணவர்களை தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் தற்காலிகமாக பாடம் நடத்த அனுப்புமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் செயல்படும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி