×

சென்னை விருகம்பாக்கத்தில் கொள்ளையர்கள் அட்டூழியம்... சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் 3 பேர் கைது

சென்னை : சென்னை விருகம்பாக்கத்தில் சாலையில் நடந்து சென்றவர்களை தாக்கிவிட்டு பணம் மற்றும் செல்போனை பறித்து சென்ற 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விருகம்பாக்கம் மெயின் சாலையில் செல்வம் என்பவர் துரித உணவகம் நடத்தி வருகிறார்.

செல்வம் துரித உணவக கடையில் பணி புரியும் இளைஞர்கள், கடையை பூட்டிவிட்டு சென்றபோது அங்கு நின்று இருந்த மூன்று பேர் அந்த இளைஞர்களை தாக்கிவிட்டு அவர்களிடம் இருந்த பணம் மற்றும் செல்போனை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். தொடர்ந்து விருகம்பாக்கம் கோதாவரி தெருவிலும் அழகுவேல் என்பவரை தாக்கிய அதே கொள்ளையர்கள் அவரிடம் இருந்து ரூ.2000 கொள்ளையடித்து சென்றுள்ளனர். அதனை தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்திய போலீசார் கொள்ளையர்கள் 3 பேரை கைது செய்துள்ளனர். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : robbers ,Chennai Vigampampakkam ,CCTV , robbers,Chennai, Vigampampakkam, CCTV ,arrested
× RELATED திருப்பதி மலைப்பாதையில் மீண்டும்...