×

காஞ்சிபுரம் அருகே பரிகாரபூஜை செய்வதாகக் கூறி தம்பதியிடம் 10 சவரன் நகை பறிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே பரிகாரபூஜை செய்வதாகக் கூறி குழந்தையில்லாத தம்பதியிடம் 10 சவரன் நகை பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன், இவரது மனைவி ஜானகி. குழந்தையில்லா தம்பதியிடம் பவுர்ணமி பூஜை செய்வதாகக் கூறி 10 சவரன் நகையை பறித்துச்சென்ற போலி மந்திரவாதியை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

இந்த தம்பதிக்கு திருமணமாகி 3 வருடங்களான நிலையில் குழந்தை இல்லை.அதனால் பல்வேறு சிகிச்சைகள் மற்றும் பூஜைகள் செய்தும் பலனில்லாததால் காஞ்சிபுரம் அடுத்த தாமரைதாங்கல் கிராமத்தை சேர்ந்த குறி சொல்லும் மந்திரவாதி பாபு என்பவரை தொடர்பு கொண்டுள்ளனர். இவர் பௌர்ணமி பூஜை செய்தால் குழந்தை பிறக்கும் எனக் கூறி ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணி அளவில், முழுமையடையாத வீடுகள் உள்ள பகுதிக்கு அழைத்து சென்று பூஜை நடத்தி உள்ளார். பிரபாகரன் தனது மனைவி ஜானகி உடன் பூஜையில் ஈடுபட்ட பாபு இவர்களை கண்களை மூடி கொண்டு மந்திரங்களை உச்சரிக்கக் கூறியுள்ளார்.

மந்திரவாதியின் பேச்சை கேட்டு கண்களை மூடி மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருக்கும் போது பிரபாகரனின் தலை மற்றும் முகத்தில் கல்லால் பயங்கரமாக தாக்கிய போலி மந்திரவாதி பாபு, ஜானகியை மிரட்டி 10 சவரன் நகையை பறித்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளார் .பின்னர் பலத்தகாயங்களுடன் கணவர் பிரபாகரன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த சம்பவம் குறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : shaving jewels ,pirakarapooja ,Kancheepuram , 10 shaving, jewels, couple,pirakarapooja, Kancheepuram
× RELATED செங்கல்பட்டு, காஞ்சிபுரம்...