×

சிறுமிகளிடம் சில்மிஷம் கம்பெனி ஊழியர் போக்சோவில் கைது

வண்ணாரப்பேட்டை: வண்ணாரப்பேட்டை சிபி அம்மன் கோயில் 4வது தெருவை சேர்ந்தவர் காந்தி (46), தனியார் கம்பெனி ஊழியர். இவர், அதே பகுதியில் வசிக்கும் ஒருவரின் வீட்டுக்கு விருந்தினராக வந்தவர்களின் குழந்தைகளான 5 மற்றும் 6 வயது கொண்ட 2 சிறுமிகளிடம் விளையாடுவதுபோல் நடித்து, சில்மிஷம் செய்துள்ளார். இதுபற்றி அறிந்த பெற்றோர், காந்தியை பிடித்து தர்மஅடி கொடுத்து, தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார், போக்சோ சட்டத்தில் அவரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Silksham ,company employee , company employee,arrested,pokse,sexual harassment,young girls
× RELATED கம்பெனி ஊழியர் பலி