×

தலைமை செயலகத்தில் யாகம்? கரையான் அரித்திருந்ததை தான் சரி செய்தோம் : OPS விளக்கம்

அவனியாபுரம்,: முதல்வர் பதவிக்காக யாகம் நடத்தப்பட்டதா என்ற கேள்விக்கு, மதுரையில் நேற்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார். மதுரை விமான நிலையத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று அளித்த பேட்டி: முதல்வர் பதவிக்காக யாகம் நடத்தினேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். யாகம் நடத்தி முதல்வர், பிரதமர் பதவிக்கு வரலாம் என்றால், யார் வேண்டுமானாலும் பதவியை பெறலாம். தலைமை செயலகத்தில் எனது அறையிலுள்ள கான்பரன்ஸ் ஹாலில் கரையான் அரித்து இருந்தது. அதுதான் சரி செய்யப்பட்டது. யாகம் எதுவும் நடத்தப்படவில்லை.

மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை, பாஜவை விமர்சனம் செய்தது தொடர்பாக, கட்சி தலைமையிடம் விளக்கம் அளித்துள்ளார். ஜெயலலிதா வழியில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். சொல்லியதை தவிர, சொல்லாத நலத்திட்டங்களையும் முதல்வர் எடப்பாடி தலைமையில் செயல்படுத்தி வருகிறோம். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதியில் 37 இடங்களில் வெற்றி பெற்றது போன்று, வருகிற தேர்தலிலும் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Secretariat , Yagam, Deputy Chief Minister, O.Panniriselvam
× RELATED விக்கிரவாண்டி தொகுதி காலியாக இருப்பதாக சட்டப்பேரவை செயலகம் அறிவிப்பு