லக்னோ: உத்தரபிரதேசத்தில் 60 வயதை தாண்டும் இந்து மடாதிபதிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். 2017-ம் ஆண்டு உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில், பா.ஜ கூட்டணி 325 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, யோகி ஆதித்யநாத் புதிய முதல்வராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 20-ம் தேதி உத்தரபிரதேச மாநிலத்தின் 21-வது முதல்வராகவும், பாஜ கட்சியின் 4வது முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றார். புதிதாக பதவியேற்ற அமைச்சர்கள், அவர்களின் வருமானம், அசையும், அசையா சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டுமென தனது முதல் அதிரடி உத்தரவை முதல்வர் யோகி ஆதித்யநாத் பிறப்பித்தார்.