சென்னை : நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அதிமுக இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை, செயற்குழுவில் முடிவு எடுக்கப்படும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். மேலும் வளர்ச்சி நிதி, புயல் நிவாரண நிதியை கேட்டும் தராத மத்திய அரசுடன் இணக்கம் என எப்படி கூற முடியும்? என்றும் அதிமுக எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்; இதை எப்படி இணக்கம் என கூற முடியும்? என்றும் தம்பிதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.