ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் இருந்து தொழிற்சாலைகள் தண்ணீரை எடுப்பதற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

டெல்லி : ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் இருந்து தொழிற்சாலைகள் தண்ணீரை எடுப்பதற்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. திமுக சார்பில் ஜோயல் என்பவர் தொடுத்த வழக்கை ஜனவரி 28ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நீர் எடுக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்கு மட்டுமே நீரை எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று ஜோயல் வழக்கு தொடர்ந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: