பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவக்குமாரசாமி காலமானார்: குமாரசாமி, எடியூரப்பா இரங்கல்

பெங்களூரு: பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவக்குமாரசாமி காலமாகியுள்ளார். 111 வயதான சிவக்குமாரசாமி ஒரு மாதமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். மடாதிபதி சிவக்குமாரசாமி இறுதிச்சடங்கு மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லிங்காயத் சமுதாயத்தின் ஆன்மிக தவைராக திகழ்ந்த சிவக்குமாரசாமியின் மறைவுக்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி, எடியூரப்பா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், சித்தகங்கா மடம் அமைந்துள்ள தும்கூரில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: