சென்னை : திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் எடப்பாடி மீது குற்றச்சாட்டியுள்ளார். தமக்கு எந்த பயமும் இல்லை என்று கூறும் முதல்வர், ஏன் ஊடகத்தை மிரட்ட வேண்டும் ? என்று கேள்வி எழுப்பிய அவர், கோடநாடு கொலை வழக்கில் எந்த வழியிலும் தப்பிக்க முடியாதபடி எடப்பாடி சிக்கிக் கொண்டார் என்று கூறினார். மேலும் முதலமைச்சர் மீது திமுக அளித்த புகாரை, குடியரசுத் தலைவர், மத்திய அரசுக்கு இன்னும் அனுப்பவில்லை என்றால் உடனே அனுப்ப வேண்டும் என்றும் ஆளுநருக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.