டி.கே.ராஜேந்திரன் டிஜிபியாக செயல்பட இடைக்கால தடை கோரும் கோரிக்கையை நிகராகரித்தது நீதிமன்றம்

மதுரை : டி.கே.ராஜேந்திரன் டிஜிபியாக செயல்பட இடைக்கால தடை கோரும் கோரிக்கையை நிகராகரித்தது நீதிமன்றம். டி.கே.ராஜேந்திரன் டிஜிபியாக செயல்பட இடைக்கால தடை விதிக்க முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. குட்கா முறைகேடு தொடர்பான ஆவணங்களை மறைத்து டி.கே.ராஜேந்திரன் பதவி நீட்டிப்பு பெற்றதாக வழக்கு தொடரப்பட்டது. டி.கே.ராஜேந்திரனின் பணி நியமனத்தை சட்ட விரோதம் என அறிவிக்க கோரிய வழக்கு 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக பதில்மனு தாக்கல் செய்ய, தமிழக தலைமை செயலர், காவல்துறை தலைவர் ராஜேந்திரனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: