வியாசர்பாடியில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு

சென்னை: வியாசர்பாடியில் தனியார் நிறுவன ஊழியரை மர்மநபர்கள்  அரிவாளால் சரமாரியாக வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை வியாசர்பாடி சர்மா நகர் எஸ்.ஏ.காலனி 8வது தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்(23). இவர் மதுரவாயலில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று இரவு 9மணியளவில் இவர் அதே தெருவில், நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் மர்மநபர்கள் 3 பேர் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்தனர். அவர்கள் கண்இமைக்கும் நேரத்தில் மணிகண்டனை சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.  

இதில் அவருக்கு தலை, கழுத்து, முதுகுப்பகுதியில் காயம் ஏற்பட்டது. ரத்தம் வடிந்த நிலையில் அலறியபடி மணிகண்டன் மயங்கி விழுந்தார். இதையடுத்து மர்மநபர்கள் அங்கிருந்து இருசக்கரவாகனத்தில் தப்பியோடிவிட்டனர்.  தகவல் அறிந்து வந்த  எம்கேபி நகர் போலீசார் மணிகண்டனை மீட்டு, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  சம்பவத்திற்கு முன்விரோதம் காரணமா  என்பது உள்ளிட்ட கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் வியாசர்பாடியில் பரபரப்பு ஏற்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: