பன்றிக் காய்ச்சல் குணமானது அமித்ஷா வீடு திரும்பினார்

புதுடெல்லி:  டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பன்றிக் காயச்சலால் சிகிச்சை பெற்று வந்த பாஜ தலைவர் அமித் ஷா நேற்று வீடு திரும்பினார்.பாஜ தலைவர் அமித் ஷாவிற்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டதால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை அனுமதிக்கப்பட்டார். அவர் குணம் அடைந்ததை தொடர்ந்து நேற்று  காலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இது குறித்து அமித் ஷா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘கடவுளின் ஆசியால் நான் தற்போது நலமாக இருக்கிறேன். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு,  வீடு திரும்பியுள்ளேன். நான் குணமடைய பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி’ என்று பதிவிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: