புதுடெல்லி: ‘பூடான், நேபாளம் நாடுளுக்கு செல்வதற்கு ஆதார் அட்டையையும் அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம்’ என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடான பூடான், சிக்கிம், அசாம், அருணாசலப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்க மாநிலத்துடன் தனது எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. இந்நாட்டில் 60 ஆயிரம் இந்தியர்கள் நீர்மின் நிலையங்கள், கட்டுமான துறைகளில் பணியாற்றி வருகின்றனர். இதேபோல் நேபாளம் 1,850 கிமீ எல்லையை சிக்கிம், மேற்கு வங்கம், பீகார், உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளது. நேபாளத்தில் 6 லட்சம் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இந்தியாவில் இருந்து தினமும் 10 ஆயிரம் பேர் வரை நேபாளத்துக்கு சென்று வருகின்றனர்.
இவ்வாறு செல்வதற்கு பாஸ்போர்ட், தேர்தல் ஆணைய அடையாள அட்டையை ஆவணமாக காட்டினால் போதுமானது. விசா பெறும் நடைமுறை தேவையில்லை.