அவனியாபுரம்: தமிழகத்தில் பாஜ வளர்ச்சிக்கு பந்தக்கால் நட்டுள்ளோம் என்று மதுரையில் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.மதுரை ரிங் ரோட்டில் வரும் 27ம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனை துவக்க விழா மற்றும் பாஜ பொதுக்கூட்டம் நடக்க உள்ளது. இதில் பிரதமர் ேமாடி கலந்து கொள்கிறார். பொதுக்கூட்டத்திற்கான கால்கோள் நடும் விழா நேற்று நடந்தது. இதில் பாஜ மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.பின்னர் நிருபர்களிடம் தமிழிசை கூறுகையில், ‘‘மதுரையில் நடக்க உள்ள பொதுக்கூட்டம் பாஜவுக்கு திருப்புமுனையாக அமையும். கொடநாடு வழக்கை சட்டரீதியாக சந்திப்பேன் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.