×

மதுரையில் தமிழிசை பேட்டி தமிழகத்தில் பாஜ வளர்ச்சிக்கு பந்தக்கால் நட்டுள்ளோம்

அவனியாபுரம்: தமிழகத்தில் பாஜ வளர்ச்சிக்கு பந்தக்கால் நட்டுள்ளோம் என்று மதுரையில் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.மதுரை ரிங் ரோட்டில் வரும் 27ம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனை துவக்க விழா மற்றும் பாஜ பொதுக்கூட்டம் நடக்க உள்ளது. இதில் பிரதமர் ேமாடி கலந்து கொள்கிறார். பொதுக்கூட்டத்திற்கான  கால்கோள் நடும் விழா நேற்று நடந்தது. இதில் பாஜ மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.பின்னர் நிருபர்களிடம் தமிழிசை கூறுகையில், ‘‘மதுரையில் நடக்க உள்ள பொதுக்கூட்டம் பாஜவுக்கு திருப்புமுனையாக அமையும். கொடநாடு வழக்கை சட்டரீதியாக சந்திப்பேன் என  முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.

குற்றச்சாட்டுகளை மட்டுமே வைத்து ஒருவரை குற்றவாளி என கூறக்கூடாது. மத்திய, மாநில அரசுகள் இணக்கமாக இருப்பதால்தான்  ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திட்டப்பணிகள் 18 மாதங்களில் முடியும் என்று துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பாஜ காலூன்றி விட்டதா என்று  கேட்கிறார்கள். இன்றுதான் பந்தக்கால் நட்டுள்ளோம். இனி பெரிய வெற்றியை நாங்கள் அடைவோம். மற்ற கட்சிகளை பார்த்து இதுமாதிரி கேட்பதில்லை. நாங்கள் வளர்ந்து வரும் கட்சி  என்பதால்தான் எங்களைப் பார்த்து கேட்கிறார்கள்,’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tamil Nadu ,Madurai , Tamil Nadu, Madurai
× RELATED சுட்டெரிக்கும் வெயிலால் பகலில் வெளிவர தயங்கும் மதுரை மக்கள்