விடுதலை செய்ய வலியுறுத்தி வேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம்

வேலூர்:  முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள்  தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், நளினி  உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசின் பரிந்துரை மீது  ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இதுவரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.இந்நிலையில், விடுதலை செய்யக்கோரி நேற்று முன்தினம் மதியமே முருகன் உண்ணாவிரதத்தை தொடங்கினார். தொடர்ந்து 2வது நாளாக நேற்றும் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.  இதையடுத்து  காலை 11 மணியளவில் சிறை கண்காணிப்பாளர் ஆண்டாள், முருகனிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது முருகனின் கோரிக்கையை அரசுக்கு தெரிவிப்பதாக அவர்  உறுதியளித்தார். இதையடுத்து முருகன், உண்ணாவிரதத்தை கைவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: