வேலூர்: தமிழ்நாடு சிறைத்துறையும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனமும் இணைந்து சிறை கைதிகளே நடத்தும் பெட்ரோல் பங்குகளை தமிழகத்தில் உள்ள முக்கிய சிறைகளின் அருகே அமைக்க முடிவு செய்தது. அதன்படி, சென்னை புழல், வேலூர், பாளையங்கோட்டை, கோவை மத்திய சிறைகளின் அருகிலும், புதுக்கோட்டை சீர்திருத்தப்பள்ளி அருகிலும் பெட்ரோல் பங்குகள் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த பெட்ரோல் பங்குகளில் வேலை செய்வதற்காக தேர்வு செய்யப்பட்ட 110 கைதிகளுக்கு பெட்ரோல் பங்கில் பணியாற்றும் முறைகள் குறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் 3 நாட்கள் பயிற்சி வழங்கப்பட உள்ளது.