வாழப்பாடி: வாழப்பாடி அருகே குறிச்சி ரங்கனூர் கிராமத்தில், நேற்று தடையை மீறி வங்காநரி ஜல்லிக்கட்டு நடந்தது. இதையடுத்து 10 பேருக்கு வனத்துறையினர் ₹50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.சேலம் மாவட்டம் வாழப்பாடி சுற்றுவட்டார கிராமங்களில், பொங்கல் பண்டிகையையொட்டி வனப்பகுதியில் வங்காநரியை பிடித்து வந்து கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் ஜல்லிக்கட்டு நடத்துவது வழக்கம். வங்காநரி ஜல்லிக்கட்டு நடத்த, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வனத்துறை தடை விதித்தது. இந்நிலையில், கடந்த 18ம் தேதி, வாழப்பாடி அடுத்த சின்னம்மநாயக்கன்பாளையம் கிராமத்தில், தடையை மீறி வங்காநரி பிடித்து வந்து வழிபாடு செய்து ஜல்லிக்கட்டு நடத்தினர். தகவலறிந்து சென்ற வனத்துறையினர் வங்காநரியை மீட்டனர். அதை பிடித்து வந்தவர்களிடம் ₹50 ஆயிரம் அபராதம் வசூலித்தனர்.