ஆலைகளை மூடியதால் பட்டாசு தொழிலாளி தற்கொலை

விருதுநகர்: சிவகாசி அருகே, வேலையில்லாத விரக்தியில் பட்டாசு தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள முதலிப்பட்டி பசும்பொன்நகரை சேர்ந்தவர் காளிமுத்து (50). இவரது மனைவி 3 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இந்நிலையில், வீடு அருகே  உள்ள வேப்பமரத்தில் காளிமுத்து நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்தார். இதுகுறித்து உறவினர்கள் கூறுகையில், ‘ஊர் அருகே உள்ள பட்டாசு ஆலையில் காளிமுத்து பணிபுரிந்து வந்தார்.  பட்டாசு ஆலைகள் மூடப்பட்டு, கடந்த 2 மாதங்களுக்கு மேல் வேலையில்லாததால், மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்’ என தெரிவித்துள்ளனர். இது குறித்து வச்சக்காரப்பட்டி  போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: