ஊத்தங்கரை: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கொரக்கோட்டையில், ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 300 டன் எடையுள்ள பிரமாண்ட பெருமாள் சிலையை ராட்சத டிரெய்லர் லாரியில் ஏற்றிக்கொண்டு கடந்த மாதம் 7ம் தேதி புறப்பட்டனர்.
பல்வேறு தடைகளை தாண்டி கடந்த 17ம் தேதி காலை ஊத்தங்கரை நோக்கி புறப்பட்டது. வழியில் பாம்பாறு தரைப்பாலம் இருப்பதால் அதை கடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.சென்னையில் இருந்து லாரியுடன் சேர்ந்து சிலையை இழுப்பதற்கான ராட்சத இயந்திரம் வரவழைக்கப்படுகிறது. இதனால், பெருமாள் சிலை அந்த இடத்தில் 4 நாட்களாக நிறுத்தி வைக்கபட்டுள்ளது.