சென்னை: 43 வது கடலோர காவல் தினத்தை முன்னிட்டு வீரர்கள் நடுக்கடலில் சாகச நிகழ்ச்சிகளில் ஈடுபட்டனர். இதை ஆயிரக்கணக்கான பொது மக்கள் கண்டுகளித்தனர். உலகின் நான்காவது பெரிய கடலோர காவல் படை என்ற பெருமையை பெற்றுள்ள இந்திய கடலோர காவல் படையானது 1977 ம் ஆண்டு பிப்ரவரி 1 ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த தினமானது கடலோர காவல் தினமாக கடைபிடிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் 43வது கடலோர காவல் படை தினம் வரும் பிப்ரவரி 1 ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு கடலோர காவல் படையில் பணிகளை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் “கடலில் ஒரு நாள்” நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அதன்படி கடந்த 18,19 மற்றும் 20ம் தேதிகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடலோர காவல் படை கப்பலில் கடலுக்குள் அழைத்து செல்லப்பட்டனர்.