சென்னை: சட்டவிரோதமாக கட்டிட கழிவுகள் நகரின் பல்வேறு பகுதிகளில் கொட்டுவதை தடுக்க 120 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு கட்டிட பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்தப் பணிகளுக்கு தேவைப்படும் செங்கல், மணல் உள்ளிட்ட பொருட்களை சாலையில் கொட்டி வைப்பதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் இடிக்கப்படும் கட்டிட கழிவுகளை இரவு நேரத்தில் நகரின் ஏதாவது ஒரு பகுதியில் கொட்டிவிடுகின்றனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு மற்றும் சுற்றுச்சூழல்மாசு ஏற்படுகிறது. இதைடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தும் நகராட்சியின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு சமூகவிரோதிகள் தப்பிவிடுகின்றனர். இந்நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் முக்கிய இடங்களில் கேமரா பொருத்தி கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தொடர் நடவடிக்கையாக சாலையில் கட்டிட கழிவுகளை கொட்டும் உரிமையாளரின் கட்டிட உரிமம் ரத்து செய்யப்படும் என்று மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டது. குறிப்பாக சேப்பாக்கம் மைதானம் பின்புறம் உள்ள விக்டோரியா ஹாஸ்டல் சாலையில் டன் கணக்கில் கட்டிட கழிவுகள் சட்டவிரோதமாக கொட்டப்பட்டுவருகின்றன. இந்நிலையில் இதை கட்டுப்படுத்த 120 இடங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.