சென்னை: பொதுப்பணித் துறையின் அங்கமான நீர்வளப் பிரிவின் கட்டுப்பாட்டில் மாநில நில மற்றும் நீர் வள ஆதார விவர குறிப்பு மைய அலுவலகம் தரமணியில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் சார்பில் மாநிலத்தின் நிலத்தடி நீர் மட்டம் ஆய்வு செய்யப்படுகிறது. இதற்காக, தமிழகம் முழுவதும் 3,238 பகுதிகளில் உள்ள திறந்தவெளி கிணறுகள் மற்றும் 1,480 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு, அதன் மூலம், தமிழகத்தில் அந்தந்த பகுதிகளில் சேகரிக்கப்பட்ட நீர் அளவு, நீர்வளஆதாரத்துறை மூலம் கணக்கிடப்படுகிறது. ஒவ்வொரு மாதத்தின் நிலத்தடி நீர் மட்ட விவரங்களை அடுத்த மாதம் முதல் வாரத்திற்குள் www.stategroundwater.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. அதன்படி கடந்த மாதத்திற்கான நிலத்தடி நீர் மட்டம் ஜனவரி முதல் வாரத்தில் வெளியிடப்பட்டது. கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை ெபாய்த்ததால், 19 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து இருப்பது தெரிய வந்தது. ஏற்கனவே, பருவமழை பொய்த்ததால் நீர்நிலைகள் வறண்டுள்ளன. எனவே, கோடை காலத்தில் தமிழகம் வறட்சியின் பிடியில் சிக்கி தவிக்கும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது என்று கடந்த ஜனவரி 13ம் தேதி தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது.