கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு மருத்துவம், கல்விக்காக ரூ.2 லட்சம்: மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு மருத்துவம், கல்விக்காக தலா ₹25 ஆயிரம் வீதம் ₹2 லட்சம் நிதியை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக கலைஞர் தந்த ₹5 கோடியில் கிடைக்கும் வட்டியில் மாதந்தோறும் ஏழை எளிய நலிந்தோர்க்கு உதவித் தொகையாக 2005 நவம்பர் மாதம் முதல் 2007  ஜனவரி மாதம் வரை வழங்கப்பட்டு வருகிறது. ₹5 கோடியில் 1 கோடியை தென்னிந்திய புத்தக விற்பனையாளர்-பதிப்பாளர் சங்கத்துக்கு 2007ல் வழங்கினார். மீதமுள்ள ₹4 கோடியில் கிடைக்கும்  வட்டியில் தொடர்ந்துஉதவித் தொகை வழங்கப்படுகிறது. இதுவரை ₹4 கோடியே 71 லட்சத்து90 ஆயிரம் உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் வட்டியில் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா ₹25 ஆயிரம் வீதம் ₹2 லட்சத்தை மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். நிதி பெறுவோர் வெளி  மாவட்டங்களில் இருந்து வந்து போகும் செலவை தவிர்ப்பதற்காக தபால் மூலம் வரைவு காசோலையாக அனுப்பப்படுகிறது. இந்த தகவலை திமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: