மின் கம்பத்தில் பைக் மோதி இருவர் சாவு

சென்னை: சேத்துப்பட்டு புல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார், மாநகராட்சி ஊழியர். இவரது மகன் அபிஷேக் (18) மற்றும் 2 மகள்களும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு அபிஷேக், தனது அக்காவை திருமணம்  செய்ய உள்ள மாப்பிள்ளையின் பைக்கை எடுத்துக் கொண்டு, தனது நண்பர் ஆகாஷ் (19) என்பவருடன் கீழ்ப்பாக்கம் நோக்கி சென்றார். அங்குள்ள குருசாமி பாலத்தில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக் தாறுமாறாக  ஓடி அங்குள்ள மின் கம்பத்தில் மோதியது. இதில், அபிஷேக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த ஆகாஷை பொதுமக்கள் மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், செல்லும் வழியிலேயே அவரும் இறந்தார். இதுகுறித்து  பாண்டிபஜார் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: