திருவொற்றியூர் காங்கிரஸ் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி முகாம்

திருவொற்றியூர்: திருவொற்றியூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது. திருவொற்றியூர் மத்திய பகுதி காங்கிரஸ் கமிட்டி சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி முகாம் சன்னதி  தெருவில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. பகுதி தலைவர் நாகராஜ் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் தீர்த்தி வரவேற்றார். முன்னாள் கவுன்சிலர் முகுந்தன் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்பி விஸ்வநாதன், மாவட்ட தலைவர் அம்பத்தூர்  மகேந்திரன் ஆகியோர் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சாவடி முகவர்கள் எப்படி பணியாற்ற வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளித்து விளக்கி பேசினர். நிர்வாகிகள் ஜோதி பிரகாஷ், சத்யநாராயணன், சுதாகர், செல்வகுமார்  உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: